T A M I L   W R I T E U P S

Education

Thunderstorm safty : இடி ‌மின்னல் பாதுகாப்பு

சமீபத்தில் மின்னல் தாக்கி நான்கு சகோதரிகள் மரணமடைந்த செய்தி நம் அனைவரையும் துக்கமடையச் செய்தது. அவர்களை இழந்து வாடும் அவர்தம் சொந்தங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் உரித்தாகுக.இக்கட்டுரை வழி மின்னல் தாக்குதல்களில் இருந்து உயிர் பிழைப்பது எப்படி? என்பதைக் காண்போம். Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா பொது நல மருத்துவர் சிவகங்கை மின்னல்களிடம் இருந்து நம்மைத் தற்காத்துக் கொள்வதற்கு முன் மின்னல்கள் ஏன்? எப்படித் தோன்றுகின்றன? என்பதைக் குறித்து நாம் அறிந்திருக்க வேண்டும். மின்னல் என்பது ஒரு இயல்பான வானியல் நிகழ்வு. தினசரி நாம் வாழும் பூமி 80 லட்சம் மின்னல்கள் தாக்குதல்களுக்கு உள்ளாகின்றது. இதன் வழியாக நமது வளி மண்டலமும் பூமியும் பேட்டரியைப் போல் தங்களைத் தாங்களே சார்ஜ் செய்து கொள்கின்றன. மின்னல் ஏற்படும் போது கனப்பொழுதில் மிக மிக அதிகமான அளவு  மின்சாரம் உண்டாகி, அது தான் செல்லும் வழியைத் தேடி பூமியிலோ அல்லது மேகங்களுக்குள்ளோ அடைந்து கொள்கிறது. இடிமின்னலுடன் கூடிய வானிலை நிலவும் போது உண்டாகும் க்யூமுலோ நிம்பஸ் மேகங்கள் மெல்ல மெல்ல மேலே எழத்துவங்குகின்றன. அந்த மேகக்கூட்டங்களின் மேல் பக்கம் காளிபிளவர் போல